இலங்கையர்களுக்கு கட்டுமான துறையில் பல வேலை வாய்ப்புகளை வழங்க இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.
நிர்மாண மற்றும் தச்சுத் துறைகளில் நாட்டில் வேலை வெற்றிடங்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
25-44 வயதிற்கு இடைப்பட்ட, அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான பணியாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
அதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான விண்ணப்பத்தை மாத்திரமே பூர்த்தி செய்ய வேண்டும் என பணியகம் தெரிவித்துள்ளது.