Site icon Tamil News

காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் : பலி எண்ணிக்கை 23000ஐக் கடந்தது!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,000ஐ தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 23,357 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தாக்குதல்களில் 59,410 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்களில் 147 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் 243 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version