Site icon Tamil News

போராளிக்குழுக்களுடன் மோதலில் ஈடுபட்ட இஸ்ரேல் – மூவர் பலி!

பாலஸ்தீன போராளிகளுடன், இஸ்ரேல் மேற்கொண்ட சண்டையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனின் நகரில் நடைபெற்ற குறித்த மோதலில்,  15 வயது சிறுவன் உட்பட மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரகிள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த சண்டையில் பல இஸ்ரேலிய துருப்புக்கள் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களும் பல மாதங்களாக வன்முறையில் சிக்கித் தவிக்கின்றனர், முக்கியமாக மேற்குக் கரையில் இந்த ஆண்டு 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனின் நகரம் பாலஸ்தீன தீவிரவாதத்தின் மையமாக இருந்து வருகிறது.

மேலும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராளிக்குழுக்களுக்கு இடையிலான மோதல் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தினசரி இடம்பெறும் தாக்குதல்களால் மக்கள் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Exit mobile version