Site icon Tamil News

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : காசாவில் கிட்டத்தட்ட 20000 பேர் மரணம்

காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் மும்முனை தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். இதற்கிடையே காசாவில் 19,667 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு காசா முனை பகுதி முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்ட தாகவும், இதில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே காசாவில் ஹமாஸ் அமைப்பின் மிகப் பெரிய சுரங்கப் பாதையை கண்டு பிடித்து உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இந்த சுரங்கப்பாதை 4 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும்.

ஹமாஸ் அமைப்பினரி டம் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 100-க்கும் மேற்பட்டோர் இருக்கும் நிலையில் மூன்று, வயதான ஆண் பிணைக் கைதிகளின் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டது.

அதில், “அவர்கள் தங் களை விரைவில் மீட்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து பேசினர். பிணைக் கைதிகளின் வீடியோவை வெளியிட்ட தற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Exit mobile version