கடந்த வருடம் லோகேஷ் தயாரிப்பில் கமல் நடித்து வெளிவந்த விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. விக்ரம் படம் ரஜினிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால் ரஜினிக்கு எப்படியாவது லோகேஷ் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்.
அதனால் லோகேஷை கூப்பிட்டு “உங்க டைரக்ஷனில் நான் படம் நடிக்க வேண்டும். அதுவே என்னுடைய கடைசி படமாக சினிமாவில் இருக்க வேண்டும்” என்று சென்டிமென்ட் ஆக பேசி அவரை லாக் செய்து இருக்கிறார்.
இப்படி கூறிய போது லோகேஷால் மறுக்க முடியவில்லை. அதனால் அவர் வேறு வழி இல்லாமல் ரஜினிக்கு படத்தை இயக்குவதற்கு ஒப்புக்கொண்டார்.
இதை தெரிந்து படத்தை தயாரிக்க லலித், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சன் பிக்சர்ஸ் என மூன்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டார்கள்.
ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் தான் என்பதால் இந்த சான்ஸ் சன் பிக்சர்ஸூக்கு சென்றது.
அத்துடன் மறுபக்கம் லோகேஷிடம் உங்களுக்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கிறோம் என்று சொல்லி இவரிடமும் இருந்து முழு சம்மதத்தையும் பெற்றுக் கொண்டனர்.
அந்த வகையில், ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவது முடிவாகியுள்ளது.