Site icon Tamil News

2,000 கிமீ தூரம் தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்த ஈரான்!

ஈரான் 2,000 கிமீ தூரம் தாக்கும் ஏவுகணையை  இன்று (25) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

இதன்படி 1,500 கிலோ (3,300 எல்பி) போர்க்கப்பலைச் சுமந்து செல்லக்கூடிய 2,000 கிமீ (1,243 மைல்கள்) தூரம் வரை செல்லக்கூடிய  கோரம்ஷஹர் 4 பாலிஸ்டிக் ஏவுகணையை ஈரான் பரிசோதணை செய்துள்ளது.

யின் மேம்படுத்தப்பட்ட பதிப்பின் காட்சிகளை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இது குறித்து ஈரானிய பாதுகாப்பு மந்திரி முகமதுரேசா அஷ்டியானி  கூறுகையில்,   மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணை திட்டங்களில் ஒன்றான ஈரான், அதன் ஆயுதங்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களை அடையும் திறன் கொண்டவை என்று கூறுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, தெஹ்ரான் தனது “தற்காப்பு” ஏவுகணை திட்டத்தை மேலும் மேம்படுத்துவதாக கூறியுள்ளது.

“ஈரானின் எதிரிகளுக்கு நாங்கள் சொல்லும் செய்தி என்னவென்றால், நாட்டையும் அதன் சாதனைகளையும் பாதுகாப்போம்.

பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம் என்பதே எங்கள் நண்பர்களுக்கு எங்களின் செய்தி” என்று தெரிவித்தார்.

Exit mobile version