Site icon Tamil News

IPL Update – மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்த ராகுல் டிராவிட்

இந்தியாவில் இந்த ஆண்டு IPL கோப்பையை ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்று அசத்தியது.

இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்கான IPL தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதே ஆரம்பித்துவிட்டன.

அடுத்த ஆண்டு IPL தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

IPL ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.

ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் அடுத்த சீசனுக்கு முன் தங்களது அணிகளைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர்களை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது.

இதேபோல், ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து குமார் சங்ககரா விலக உள்ளதாகவும், டிராவிட் அந்தப் பதவிக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Exit mobile version