ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரியான ரெபேகா க்ரின்ஸ்பான், இந்த வாரம் மாஸ்கோ செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பான கருங்கடல் ஏற்றுமதியை அனுமதிக்கும் ஐ.நா. தரகு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ள நிலையில், அவரது இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
கடந்த ஜூலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மே 18க்கு அப்பால் தொடர அனுமதிக்க மாட்டோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் உற்பத்தி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி ஒப்பந்தத்தை தொடர மாட்டோன் என தெரிவித்துள்ளது.
எனவே இந்த விடயங்கள் குறித்த கலந்துரையாடல்கள் ரெபேகா க்ரின்ஸ்பானின் விஜயத்தின் போது இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.