Site icon Tamil News

2000 வாகனங்கள் தொடர்பில் இலங்கை புலனாய்வு துறை வெளியிட்ட தகவல்கள்!

அரசாங்க பதவிகளில் இருக்கும் அரச அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட 2000 வாகனங்கள் அவர்களுடைய குடும்பத்தினரின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக பெருமளவிலான பணம் வீண்விரயமாகியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில தலைவர்கள் தனியார் வாகனங்களை தாம் பணிபுரியும்  நிறுவனத்திற்கு வாடகைக்கு வழங்கி, அவற்றையும் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version