Site icon Tamil News

புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் குறித்த தகவல்!

இலங்கை புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டு பணம் 2022 ஏப்ரல் மாதத்தை விட இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி கடந்த ஏப்ரல் மாதம் நாட்டிற்குக் கிடைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.  இது 205.1 மில்லியன் அமெரிக்க டாலர் (82.4%) அதிகரிப்பாகும் என்று அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மார்ச் 2023 இல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய 568 மில்லியன் டொலர்களைக் காட்டிலும், தற்போது குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் இலங்கை தொடர்ந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தில் பதிவு செய்துள்ளதுடன், மொத்த வரவு 1867.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version