Site icon Tamil News

இந்தியாவில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவு : காணாமல்போயுள்ள மற்றுமொரு குழுவினர்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு குழுவினர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் மேப்பாடி பகுதியில் இன்று (30) நிலச்சரிவு ஏற்பட்டது.

பாதுகாப்புப் படையினரும், நிவாரணக் குழுக்களும் அங்கு சிக்கியுள்ள மக்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனமழை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் சிலர் சாலியாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Exit mobile version