Site icon Tamil News

கொழும்பு துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்ட இந்திய கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டில்லி எனும் யுத்த கப்பல் நேற்று (01.08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

163 மீட்டர் நீளமுடைய குறித்த கப்பலில் வருகை தந்துள்ள கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஐ.என்.எஸ். டில்லி கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவின் சீனாவின் ‘யுவான் வாங் 5’ கப்பல் கடந்தவாரம் இலங்கையின் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அத்துடன் ஆய்வு கப்பல் ஒன்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து இந்தியா அதிக கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தது.

இந்த பின்னணியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (02.09) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அவருடைய பயணம் பிற்போடப்பட்டுள்ளது.

Exit mobile version