Site icon Tamil News

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்ட இந்திய கடற்படை!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது.

அந்த கப்பலில் 17 பணியாளர்களுடன் இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோக்கள் உதவியுடன் இந்திய கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கு 35 சோமாலிய கடற்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

MV Ruen என்ற மால்டா நாட்டின் கொடியுடன் கூடிய மொத்த சரக்குக் கப்பல் மீட்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக ஏடன் வளைகுடாவில் பயணித்த சோமாலிய கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட வர்த்தகக் கப்பலை சர்வதேச கடற்படை மீட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version