Site icon Tamil News

வங்கதேச ரசிகரை தாக்கிய இந்திய ரசிகர்கள்

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் இன்றைய தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

போட்டியின்போது பார்வையாளராக வந்திருந்த வங்கதேச அணியின் தீவிர ரசிகராக அறியப்படும் டைகர் ராபி என்பவரை இந்திய அணி ரசிகர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் படுகாயமடைந்துள்ள டைகர் ராபி அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தனது முதுகிலும் அடிவயிற்றிலும் அவர்கள் அடித்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் ஏறிக்கொண்டதாகவும் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்றும் ராபி கடுமையான வலியில் பேச முடியாமல் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆனால் இந்திய அணி ரசிகர்கள் ராபியை தாக்கினர் என்பதை மைதானத்தில் காவலுக்கு நின்ற உள்ளூர் போலீஸ் மறுத்துள்ளது.

Exit mobile version