Site icon Tamil News

எண்ணெய் வர்த்தகத்தில் ஆபத்தில் உள்ள இந்திய பொருளாதாரம் – அமெரிக்கா கருத்து!

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கான G7 விலை வரம்பு, உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பை ஆதரிக்க மாஸ்கோவிற்கு கிடைக்கும் வருவாயைக் குறைக்கிறது என அமெரிக்க அதிகாரிகள் ஒரு நிகழ்வில் தெரிவிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அமெரிக்க கருவூல அதிகாரிகளான பொருளாதாரக் கொள்கைக்கான உதவிச் செயலர் எரிக் வான் நோஸ்ட்ராண்ட் மற்றும் பயங்கரவாத நிதி உதவிச் செயலர் அன்னா மோரிஸ் ஆகியோர், புதுதில்லியில் உள்ள அனந்தா ஆஸ்பென் மையத்தில் நடைபெறும் நிகழ்வில் இந்தக் கருத்துக்களை வெளியிடுவார்கள் என்று அமெரிக்க கரூவூலம் தெரிவித்துள்ளது.

“ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் ஆபத்தில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் விலை உச்சவரம்பைத் தவிர்க்க வடிவமைக்கப்பட்ட உலகளாவிய விநியோக இடையூறுகளிலிருந்து அதிகம் ஆபத்தில் உள்ளது” என்று அவர்கள் தெரிக்கவுள்ளதாக அமெரிக்க கரூவூலம் மேலும் தெரிவித்துள்ளது.

மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் கச்சா எண்ணெய்க்கான சந்தையை ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு மாற்றியதில் இருந்து, ரஷ்ய எண்ணெயின் சிறந்த நுகர்வோர்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version