அரசு முறை பயணமாக கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இருநாடுகள் இடையிலான பாதுகாப்பு மற்றும் தொழில்துறை குறித்து முக்கிய விவாதங்கள் நடத்தவும் தலைவர்களை சந்தித்து பேசவும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.