Site icon Tamil News

ஸ்காட்லாந்தில் இந்தியத் தூதருக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளால் நேர்ந்த நிலை!

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் இந்தியத் தூதரை காலிஸ்தான் பயங்கரவாதிகள் திடீரென வழிமறித்து தடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவிற்கு செல்ல முயன்ற நிலையில், அவரை உள்ளே நுழைய விடாமல் அங்கிருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது.இது குறித்த காணொளி ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் விக்ரம் துரைசாமியை ஸ்காட்லாந்து ஆல்பர்ட் டிரைவில் உள்ள கிளாஸ்கோ குருத்வாராவிற்குள் நுழைய விடாமல் தடுப்பது தெளிவாகத் தெரிகிறது.

Exit mobile version