Site icon Tamil News

இலங்கையை நோட்டமிட அனுமதி கோரிய இந்தியா? வெளியாகிய முக்கிய தகவல்

மன்னார் மணல்மேடு மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட சில இடங்களில் டிரோன் கமராக்களை பொருத்துவதற்கு இலங்கையிடம் இந்தியா அனுமதி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் யோகா பயிற்சிகளை அறிமுகப்படுத்தும் திட்டத்துக்காக என்று கூறி இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

டிரோன் கமராக்கள் மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க இலங்கை அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

நெடுந்தீவு , மன்னார் மணல்மேடு, மன்னார் ராட்சத மரம் உள்ளிட்ட எட்டு பிரபலமான இடங்களை பயன்படுத்த இந்திய உயர்ஸ்தானிகராலயம் அனுமதி கோரியுள்ளது.

இதற்கான அனுமதி கோரி இலங்கை அரசிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியிருப்பினும் இந்தியா அவ்வாறு அனுமதி கோரிய செய்தியை இலங்கை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version