Site icon Tamil News

இந்தியா-கனடா போர் என்பது யானைக்கும் எறும்புக்கும் இடையே நடக்கும் போர்!! அமெரிக்கா

கனேடிய பிரஜையின் கொலையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபினும் அது குறித்து தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்த நேரத்தில் இந்தியா அல்லது கனடா பற்றி அமெரிக்கா ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றால், இந்தியா மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் அங்கு கூறியிருந்தார்.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய சூழலை யானைக்கும் எறும்புக்கும் ஒப்பிட்டுள்ளார்.

தற்போது கனடா மற்றும் இந்தியாவுடன் சண்டையிட ஆசைப்படுவது எறும்புக்கும் யானைக்கும் இடையிலான சண்டை என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவை யானை என்று அவர் வியாக்கியானம் செய்திருப்பது சர்வதேச சமூகத்தில் தீவிர விவாதத்திற்கு உள்ளானது.

Exit mobile version