Site icon Tamil News

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள்!

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு 476 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 317 பேர் ஆண்கள் எனவும்  மீதமுள்ள 159 பேர் பெண்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பிரச்சனைகள்,  வேலை வாய்ப்பு மற்றும் நிதிச் சிக்கல்கள்  காதல் உறவுகள் போன்ற காரணங்களுக்காக அதிகளவானோர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

உலகளாவிய ரீதியில்  ஆண் தற்கொலை இறப்புகள் பெண்களின் தற்கொலை இறப்புகளை விட அதிகமாக உள்ளதாக ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version