Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் அதிகரித்த பயணத் தேவை – விமான சேவையின் எதிர்பார்ப்பு

ஆஸ்திரேலியாவின் முதன்மை விமான நிறுவனமான Qantas இவ்வாண்டு ஆக அதிக வருடாந்திர இலாபத்தை எதிர்பார்ப்பதாக நேற்று தெரிவித்துள்ளது.

பயணத் தேவை அதிகரித்துள்ளதால் இந்த இலாபம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Qantas நிறுவனம் பங்குச் சந்தையிலிருந்து 100 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் பெறுமான பங்குகளைத் திரும்பப் பெற எண்ணியுள்ளது.

COVID-19 நோய்ப்பரவலுக்குப் பிறகு எரிபொருளின் விலையும் ஊழியர்களின் சம்பளமும் கூடின. அவை அந்தத் துறையின் மீட்புக்குச் சவாலாக அமைந்தன.

இருப்பினும் பயணத்துறை சூடுபிடித்ததால் உலகளவில் பல விமான நிறுவனங்கள் பலன் கண்டுள்ளன.

இவ்வாண்டு Qantas நிறுவனத்தின் லாபம் வரி-விதிப்புக்கு முன் 2.43 பில்லியன் ஆஸ்திரேலிய டொலருக்கும் 2.48 பில்லியன் டொலருக்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

கடந்த ஆண்டு Qantas நிறுவனம் 1.86 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நட்டத்தைச் சந்தித்தது.

Exit mobile version