Site icon Tamil News

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 28,493 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, சராசரியாக நாளொன்றில் 7,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு மொத்தமாக 1 இலட்சத்து 7 ஆயிரத்து 639 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் ரஷ்யாவிலிருந்து 4,279 பேரும் இந்தியாவிருந்து 4,23 பேரும் சுற்றுலா மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவ்வாறே, பிரித்தானியாவிலிருந்து 2,592 பேரும், ஜேர்மனியிலிருந்து 1,977 பேரும், சீனாவிலிருந்து 1,950 பேரும் குறித்த காலப்பகுதியிலிருந்து நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

Exit mobile version