Site icon Tamil News

டெங்குநோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்,  56,228 டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதாகவும்,  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதில் 27, 883 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர் எனவும்,  அதிகூடிய டெங்கு நோயாளர்கள்,  கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 12 ஆயிரத்து 154 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.

Exit mobile version