Site icon Tamil News

ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் என்னாலேயே தோல்வி – மகேஷ் தீக்ஷனா

உலகக் கோப்பையில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியுடன் தோல்வியடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், போட்டியின் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.

அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனதே தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி தற்போது உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version