Tamil News

கல்கி படத்தை பார்த்து விட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்

‘கல்கி 2898 AD’ படத்தை பார்த்த பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை எந்த ஒரு படத்திற்கும் போடாத பதிவை, பதிவிட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘கல்கி 2898 AD’ படத்தை பார்த்து விட்டு… ரசிகர்களே ஆச்சர்யப்படும் விதத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது,

“கல்கி படத்தை பார்த்தேன். வாவ் என்ன ஒரு வரலாற்று படம். இயக்குனர் நாக் அஸ்வின் இந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார். என் நண்பர்கள் அஸ்வின் தத், அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் அனைவருக்கு என் மனதார வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இரண்டாவது பாகத்திற்காக வெயிட் பண்ணுவதாக கூறி ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version