Site icon Tamil News

இலங்கையில் வாள் வெட்டில் துண்டிக்கப்பட்ட கையை விட்டோடிய இளைஞன்..!

மாரவில , பஹல வலஹாபிட்டிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 23 வயதுடைய இளைஞன் ஒருவனின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டதுடன், காயமடைந்த நபர் கையை சம்பவ இடத்தில் விட்டு தப்பியோடியுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர் .

சில காலமாக நிலவி வந்த தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

காயமடைந்த இளைஞன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , தாக்குதலை மேற்கொண்ட நபர், கீழ் வலஹாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான் 35 வயதுடையவர் என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

 

Exit mobile version