Site icon Tamil News

இலங்கையில் மதுபோதையில் பிக்கு அட்டகாசம்

ஊராபொல பிரதேசத்தில் மது அருந்தி போதை ஏறிய நிலையில், பிக்கு ஒருவர் குழப்ப ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இந்த பௌத்த பிக்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை இருக்கவில்லை என அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட பௌத்த பிக்கு, இசை நிகழ்ச்சியை காண சென்றிருந்த சிலருடன் தகராறை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

இதன் போது பொலிஸார் தலையிட்டு பௌத்த பிக்குவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த பிக்கு பொலிஸார் சிலரையும் தாக்கியுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் பதற்றமாக நடந்துக்கொண்ட சந்தேக நபர், அங்கிருந்த கண்ணாடி ஒன்றை தாக்கி உடைத்துள்ளார்.

இதனால், அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவரை வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Exit mobile version