Site icon Tamil News

யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஹெரோயினுடன் கைது!

யாழ்ப்பாணத்தில் பிரபல நகைக்கடை ஒன்றின் உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டைப்பாசம் வீதி பகுதியில் நீண்டகாலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய பெண் ஒருவர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Exit mobile version