Site icon Tamil News

இந்தியாவில் கொள்ளையடிக்க வந்த இடத்தில் திருடனை மூச்சுவாங்க வைத்த தண்டனை

மத்தியப் பிரதேசத்தில் திருடுவதற்காக ஓர் உடற்பநிற்சி கூடத்திற்குள் புகுந்த நபருக்கு, வித்தியாசமான தண்டனையை வழங்கினார் அந்தக் கூடத்தின் உரிமையாளர்.

நள்ளிரவு நேரத்தில் மூடப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடத்திற்குள் சென்ற அந்தத் திருடன், என்னென்ன திருடலாம் என்று அவ்விடத்தில் வலம்வந்தபோது தனது ஒவ்வோர் அசைவையும் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பதை அறியத் தவறிவிட்டார்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த உடற்பயிற்சிக்கூட உரிமையாளர், திருடன் இருக்கும் காணொளியைப் பார்த்த உடனே அவ்விடத்திற்குச் சென்றுவிட்டார்.

திருடன் கையும் களவுமாகப் பிடிபட்டான். ஆனால், காவல்துறைக்குத் தகவல் தெரிவிப்பதற்கு முன் அந்த உரிமையாளர் வேறு ஒரு தண்டனையைத் திருடனுக்காக வைத்திருந்தார்.

விலைமதிப்புள்ள பொருள்களை எடுக்கச் சென்றவருக்கு, இறுதியில் ‘டிரெட்மில்’ உடற்பயிற்சி சாதனத்தில் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருடன் அந்த உடற்பயிற்சி சாதனத்தில் ஓடிக் களைத்துப் போனபோதும் தொடர்ந்து ஓட வேண்டும் என்று உடற்பயிற்சிக்கூட உரிமையாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருடனுக்குச் சரியான பாடம் புகட்டிய திருப்தியுடன் பின்னர் அந்த உரிமையாளர் திருடனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

Exit mobile version