Tamil News

இந்தியாவில் முன்னாள் காதலனால் திருமண மேடையில் வைத்து மணமகனுக்கு நேர்ந்த கதி…!

தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்குச் சென்ற காதலன், திடீரென மணமகனை அடித்து உதைத்த சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம், பில்வாராவில் நடைபெற்ற திருமணத்தின் போது பரிசு வழங்குவது போல, மணகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடந்த போது மணமகனை மணமகளும், அவளது உறவினர்களும் பாதுகாக்க முயற்சிக்கின்றனர். மணமக்களுடன் புகைப்படம் எடுப்பது போல மேடையேறிய மணமகளின் முன்னாள் காதலின் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். அவரை திருமணத்திற்கு வந்தவர்கள் பிடிக்க முயற்சித்த போது, தாக்குதல் நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

மணமேடையில் நடைபெற்ற தாக்குதல்.

இந்த திருமணத்திற்கு வந்த ஒருவர், இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோழைத்தமான முடிவும் என்றும் விமர்சித்துள்ளனர்.

இதுதொடர்பாக மணமகன் மீது தாக்குதல் நடத்திய ஷங்கர் லால் பாரதி என்பவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

Exit mobile version