Site icon Tamil News

இலங்கையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் செனல்-04 தான் பொறுப்பேற்க வேண்டும்!

சனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது.

இது குறித்துபாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்  உண்மை, நீதி மற்றும் தேசத்தின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை  பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை மதிப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சனல் -04ஆல் செய்யப்படும் அடிப்படையற்ற, தீங்கிழைக்கும் மற்றும் மோசமான கூற்றுக்களால் எழும் எந்தவொரு திட்டமிடப்படாத செயல்களுக்கும் அல்லது விளைவுகளுக்கும் சனல் 4 பொறுப்பேற்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்துகிறது.

Exit mobile version