Site icon Tamil News

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத.

அம்பதலை நீர் விநியோகத் தொகுதியில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரையிலான 16 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version