Site icon Tamil News

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

சிங்கப்பூரில் செப்டம்பர் மாதம் முதல் நடப்புக்கு வரும் சில மாற்றங்கள் அல்லது நடைமுறைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் ஹோட்டல் துறைக்கு இந்தியாவில் இருந்து Work permit ஊழியர்களை கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சமையல் ஊழியர்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், செப்டம்பர் 1 முதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிங்கப்பூரில் செப். 1-ம் தேதி பொது விடுமுறை நாள் என்பதால் அனைத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை இது என மனிதவள அமைச்சகம் (MOM) செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

புதிய வேலை அனுமதிக்கான விண்ணப்பங்கள்

செப்டம்பர் 1 முதல் சமர்ப்பிக்கப்படும் புதிய வேலை அனுமதிக்கான விண்ணப்பங்களில் கல்வித் தகுதிகளை சரிபார்க்க 12 பின்னணி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய வேலை அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முதலாளிகள், செப்டம்பர் 1 முதல் விண்ணப்பதாரர்களின் டிப்ளமோ மற்றும் உயர்கல்வித் தகுதிகளின் சரிபார்ப்புச் சான்றிதழையும் வழங்க வேண்டும் என்று மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

Exit mobile version