Site icon Tamil News

யாழில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய தகவல்! பொலிஸார் அதிரடி நடவடிக்கை

யாழ். நகரின் முச்சக்கர வண்டி நிலையத்திலிருந்து கட்டண மீற்றர் இல்லாத முச்சக்கர வண்டிகளை அகற்றுவதற்கு யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ். நகரில் இன்று (03) வியாழக்கிழமை காலை முதல் பொலிஸார் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ். மாவட்டத்தில் வாடகைக்கு விடப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு போதிய மீற்றர் இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகளவில் அறவிடப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டண அளவீட்டின் பிரகாரம் முச்சக்கர வண்டிகளை இயக்க அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.சிவபாலசுந்தரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version