Site icon Tamil News

கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து முக்கிய கலந்துரையாடல்!

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16.09) இடம்பெற்ற மாநாட்டின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மாவட்டச் செயலாளர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டில், கிராம நிர்வாக அலுவலர்களின் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் கிராம சேவை உத்தியோகத்தர்களின் தற்போதைய கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version