Site icon Tamil News

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தல வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) உடன்படிக்கையின் தொடர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் IMF இன் EFF வேலைத்திட்டம் அடுத்த 04 வருடங்களுக்கு தொடர வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (டிசம்பர் 29) பிற்பகல் நடைபெற்ற விசேட மாநாட்டில் இதனை தெரிவித்த்துள்ளார்.

கடன் நிவாரணம் மற்றும் சர்வதேச நிதி உதவிகளைப் பெறுவதற்கு இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version