Site icon Tamil News

இலங்கையில் பரவும் வைரஸ் நோய்களின் தாக்கம் – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பல்வேறு காரணங்களினால் சிறு பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் வைத்தியர் கல்லூரியின் செயலாளர் வைத்தியர் சன்ன டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

பல்வேறு வைரஸ் தொற்றுகள் காரணமாக சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகம் காணப்படுகின்றது.

அதனால் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் சிறுவர்களிடையே அதிகமாக பரவுவதாகவும் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவிக்கின்றார்.

இந்த நோய்கள் மிக இலகுவாகப் பரவும் என்பதால், சிறு குழந்தைகளை முடிந்தவரை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என விசேட வைத்தியர் வைத்தியர் சன்ன டி சில்வா மேலும் தெரிவிக்கின்றார்.

Exit mobile version