Site icon Tamil News

கனடாவில் இருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்!

கனடாவிற்கு புலம் பெயர்ந்து செல்லும் பலர் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய அட்லாண்டிக் பேர் ஆண்டில் குடியேறிகளின் எண்ணிக்கை 6000 மாக காணப்பட்டதாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 32000 மாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்கும் குடியேறிகளில் 50 வீதமானவர்கள் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் தாக்குப் பிடிக்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வீடமைப்பு, மருத்துவ சேவை, கல்வி வசதி, பாடசாலை வசதி போன்ற சில காரணிகளினால் குடியேறிகள் தொடர்ச்சியாக கனடாவில் வாழ்வதற்கு விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வாழ்க்கை செலவு அதிகரிப்பும் பாரிய தாக்கம் செலுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version