Site icon Tamil News

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற IMF தயார்: வெளியான அறிவிப்பு

இலங்கையின் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்புப் பொதியின் சமீபத்திய மீளாய்வு உட்பட இலங்கையின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட இடதுசாரி ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திங்கட்கிழமை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், “IMF-ஆதரவு வேலைத்திட்டத்தின் மூன்றாவது மறுஆய்வு நேரம் குறித்து புதிய நிர்வாகத்துடன் கூடிய விரைவில் கலந்துரையாடுவோம்” என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

“2022 இல் இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளில் ஒன்றிற்குள் நுழைந்ததில் இருந்து இலங்கையை பொருளாதார மீட்சிக்கான பாதையில் கொண்டு செல்ல உதவிய கடின வெற்றிகளை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என IMF மேலும் தெரிவித்துள்ளது.

IMF தனது அறிக்கையில், பத்திரப்பதிவுதாரர்களுடனான சமீபத்திய ஒப்பந்தம் “இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது” என்று கூறியது.

Exit mobile version