பாகிஸ்தானுக்கு 02ஆவது தவணை கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.
இதன்படி இரண்டாம் தவணையாக 700 மில்லியன் டொலர்கள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்தில், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் 03 பில்லியன் டொலர்களை வழங்கியது.
சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரண்டாவது தவணையை வழங்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.