Site icon Tamil News

பிரான்ஸில் கணவர் எடுத்த விபரீத முடிவு – சடலமாக மீட்கப்பட்ட தம்பதி

பிரான்ஸில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவரதும் ஆண் ஒருவரதும் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

62 வயதுடைய குறித்த பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவரது கணவர் 75 வயதுடையவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர நிலையில், இருவரது சடலமும் மீட்கப்பட்டது.

இவ்வருடத்தில் இடம்பெற்ற முதலாவது குடும்ப வன்முறை படுகொலை இதுவாகும். 2022 ஆம் ஆண்டில் 118 பெண்களும், 2023 ஆம் ஆண்டில் 94 பெண்களும் குடும்ப வன்முறையில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்ற 2023 ஆம் ஆண்டில் 94 பெண்கள் குடும்ப வன்முறையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இவ்வருடத்தின் முதலாவது பெண் படுகொலை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

Exit mobile version