மத்திய கிரீஸ் துறைமுக நகரான வோலோஸில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான டன் நன்னீர் மீன்கள் இறந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மோசமான வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நன்னீர் மீன்கள் இறந்துள்ளன.
கடல் நீரில் நன்னீர் மீன்கள் வாழ முடியாது என்பதாலேயே இவ்வாறு மீன்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
இதனால் துறைமுகத்தை சுற்றியுள்ள மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடும் என்பதால் துறைமுக நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.