Site icon Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக 1 கிலோ 748 கிராம் நிறையுடைய தங்கத்தை நாட்டிற்கு கொண்டு வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து நாட்டுக்குள் பிரவேசித்த பெண் தொடர்பில், சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது, குறித்தப் பெண்ணிடம் இருந்து 1 கிலோ 748 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிதுள்ளது.

குறித்த பெண் இந்தியாவைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைக்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version