Site icon Tamil News

அமெரிக்க கடற்படையின் மிதக்கும் மொபைல் தளத்தை தாக்கிய ஹுதி கிளர்ச்சியாளர்கள்!

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள், அமெரிக்க கடற்படையின் மொபைல் தளத்தை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அவர்களின் கூற்றுக்கான ஆதாரம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களின் கூற்றை நிராகரித்துள்ளனர்.

USS Lewis B. Puller என்ற கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாக வணிகக் கப்பல் போக்குவரத்தின் மீதான ஹூதி தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, புல்லர் முன்பு அரபிக்கடலில் நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நவம்பர் முதல், கிளர்ச்சியாளர்கள் ஹமாஸுக்கு எதிராக காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக செங்கடலில் உள்ள கப்பல்களை பலமுறை குறிவைத்து ஹுதி கிளர்ச்சியாளர்கள்  தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version