Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் மர்மமான முறையில் மரணிக்கும் குதிரைகள் – அதிர்ச்சியில் அதிகாரிகள்

ஆஸ்திரேலியாவில் – விக்டோரியா மாகாணத்தின் பல பகுதிகளில் 02 வாரங்களுக்குள் 10 குதிரைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அரச சுகாதார திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

மார்னிங்டன் தீபகற்பத்தில் – தென்கிழக்கு மெல்போர்ன் மற்றும் தென்மேற்கு மெல்போர்ன் ஆகிய இடங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன.

இந்த சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏதேனும் உடல் நிலை காரணமாக மரணங்கள் இடம்பெற்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

விக்டோரியாவில் குதிரைப் பந்தயத்திற்கான நிர்வாகக் குழுவான ரேசிங் விக்டோரியா, இந்த இறப்புகளால் பந்தய மைதானங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று கூறியது.

எவ்வாறாயினும், அவர்களின் குதிரைகளில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விக்டோரியா விவசாய திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Exit mobile version