Site icon Tamil News

இலங்கையில் நடந்த கோர விபத்து: தலை துண்டிக்கப்பட்டு பெண் பலி!

அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் நொச்சியாகம நகரின் மத்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இராஜாங்கனைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்தில் உயிரிழந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

நொச்சியாகம பகுதியில் உந்துருளி மீது சொகுசு பேருந்து மோதியதுடன், அதில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் விபத்திற்குள்ளாகினர்.

சம்பவத்தில் பெண் பேருந்தின் சில்லுகளில் நசுங்கிய நிலையில் தலை துண்டிக்கப்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சாரதி நொச்சியாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version