Site icon Tamil News

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கோர விபத்து : 17 பேர் பலி!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 350 பேர் காயமடைந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் சீரற்ற வானிலையால் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக  அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

பொது சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஜமான் அமர் மேற்படி தகவல்களை அறிவித்துள்ளார்.

விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அறிவித்துள்ளனர்.

Exit mobile version