ஓம் நமசிவாய வாழ்க
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி..! சிராப்பள்ளி – (திருச்சிராப்பள்ளி) பாகம்:02 பாடல் எண்: 02/11..! நெரித்தவன், மலையெடுக்க நினைத்தவனை; மன்மதனை எரித்தவன், எரிவிடத்தை இமையவர்க்காக் கண்டத்தில் தரித்தவன்; சடையில்நதி தடுத்தவன்;முப் புரம்எரியச் சிரித்தவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே! இதன் பொருள்: நெரித்தல் – நசுக்குதல்; மலை எடுக்க நினைத்தவன் – கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணன்; எரிவிடம் – வினைத்தொகை – எரி விடம் – எரிக்கும் விஷம்; இமையவர் – தேவர்கள்; தரித்தல் – […]












