இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய தமிழர்கள் 7 பேர்!

  • April 29, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக நேற்று தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் வந்திறங்கினர் இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அவர்கள் வெளியேறியுள்ளனர். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள 2 ஆவது மணல் திட்டையில் நேற்று காலை குழந்தைகள் உட்பட 7 பேர் தவித்தபடி நின்றதை கடலுக்குச் சென்ற மீனவர்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து […]

ஆசியா

மலேசியாவில் நடந்த சோகம் – வெப்பத்தால் உயிரிழந்த ஒரு வயது குழந்தை

  • April 29, 2023
  • 0 Comments

மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் வெப்பத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நூர் இமானி (Nur Imani) எனும் அந்தக் குழந்தைக்கு ஒரு வயது 7 மாதமாகின்றது. நூர் இமானி கடந்த ஒருவாரமாக இருமல், வாந்தி முதலிய உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். குழந்தை வெப்பத் தாக்கத்தால் மரணமடைந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. குழந்தையின் நீர்ச்சத்து குறைந்துவிட்டது. அதனால் அதன் நுரையீரல் சுருங்கிப்போனது. திங்கட்கிழமை முதல் குழந்தையின் நிலை கவலைக்கிடமானது. அன்றிரவு பெற்றோர் […]

ஐரோப்பா

லண்டனில் ஓட்டப் போட்டிக் சென்றவர் திடீர் மரணம்

  • April 29, 2023
  • 0 Comments

லண்டனில் இடம்பெற்ற London Marathon எனும் நெடுந்தொலைவு ஓட்டத்துக்குப் பிறகு வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார். 45 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பந்தய ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டீவ் ஷாங்க்ஸ் (Steve Shanks) என்ற அந்த நபர் சுமார் 42 கிலோமீட்டர் ஓட்டப்பாதையை 2 மணி நேரம், 53 நிமிடம், 26 வினாடிகளில் ஓடிமுடித்தார். அவர் ஓர் அனுபவம்வாய்ந்த நெடுந்தொலைவு ஓட்டப்பந்தய வீரர் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர். அவரது மரணத்துக்குக் காரணம் என்னவென்று மருத்துவப் பரிசோதனை மூலம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் திருமண நிகழ்வொன்றில் ஏற்பட்ட பரபரப்பு – மணப்பெணுக்கு நேர்ந்த கதி

  • April 29, 2023
  • 0 Comments

பிரான்ஸில் திருமண நிகழ்வொன்றின் போது விருந்தினர் ஒருவர் மணப்பெண்ணை கண்ணாடிப்போத்தல் ஒன்றினால் தாக்கியமையினால் திருமணம் தடைப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை Noyon (Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றுக்கு நிறைந்த மதுபோதையில் விருந்தினர் ஒருவர் வருகை தந்துள்ளார். அவர் திருமணத்தை நிறுத்தும் முகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு ஜொந்தாமினர் அழைக்கப்பட்டனர். பின்னர் அவரை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து ஜொந்தாமினர் சென்றனர். ஆனால் நிலமை அதன் பின்னரே மோசமடைந்தது. குறித்த நபர் உடைந்த கண்ணாடிப்போத்தல் ஒன்றின் மூலம் […]

இலங்கை

இலங்கையில் சுனாமி அபாயம் தொடர்பில் ரிங்டோன் அறிமுகம்!

  • April 29, 2023
  • 0 Comments

சுனாமி அபாயம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கையடக்கத் தொலைபேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் 99.9 வீதமான மக்கள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதால், சுனாமி அபாயம் தொடர்பில் கையடக்கத் தொலைபேசியின் ரிங்டோன் மூலம் அவர்களுக்கு தெரிவிக்கப்படுமென, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து இந்தப் பணியைச் செய்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலானோர் அதிகாலை ஒரு […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் நகரங்களை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் 25 பேர் பலி

  • April 28, 2023
  • 0 Comments

கெய்வ் உட்பட உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்ய விமானத் தாக்குதல்களின் அலை குறைந்தது 25 பேரைக் கொன்றது. மத்திய நகரமான உமானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைத் நடத்திய தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் மேயர் படி Dnipro நகரில் ஒரு பெண் மற்றும் அவரது மூன்று வயது மகள் கொல்லப்பட்டனர். உக்ரேனிய இராணுவ இருப்புப் பிரிவுகளை தாக்குதலுடன் அதன் இராணுவம் குறிவைத்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் […]

இலங்கை செய்தி

போரில் ரஷ்யா நிச்சயம் வெற்றி பெறும்

  • April 28, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா நிச்சயம் வெற்றி பெறும் என்றும், இது உக்ரைன் மக்களுக்கு எதிரான போர் அல்ல என்றும், மேற்கத்திய நிகழ்ச்சி நிரல்களுக்கும் உக்ரைனின் பொம்மை ஜனாதிபதிக்கும் எதிரான போர் மட்டுமே என்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகாரியன் தெரிவித்துள்ளார். உக்ரேனில் ரஷ்ய விசேட செயற்பாடுகள் தொடர்பில் கொழும்பில் உள்ள ரஷ்ய கலாசார நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ரஷ்ய தூதுவர், கடந்த ஐரோப்பிய குளிர்காலம் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் இலவச உணவகம் நடத்தும் ஜப்பானிய முதியவர்

  • April 28, 2023
  • 0 Comments

75 வயதான ஜப்பானியரான Fuminori Tsuchiko, ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மக்களுக்கு உதவ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்பியதால், கடந்த ஆண்டு உக்ரைனின் கார்கிவ் நகரில் ஒரு இலவச கஃபே ஒன்றைத் திறந்தார். ரஷ்ய ஷெல் தாக்குதலால் சுரங்கப்பாதை நிலையங்களில் தஞ்சம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்ட குடியிருப்பாளர்களின் அவலநிலையால் நகர்ந்து, சுச்சிகோ தங்க முடிவு செய்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பல மாதங்கள் அவர் ஒரு மெட்ரோ நிலையத்தில் வசித்து வந்தார் மற்றும் சுரங்கப்பாதையில் உணவு விநியோகிக்கும் […]

ஐரோப்பா செய்தி

பிபிசி தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் பதவியை ராஜினாமா செய்தார்

  • April 28, 2023
  • 0 Comments

விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட பிபிசி தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் வெள்ளியன்று இராஜினாமா செய்தார். இந்நிலையில, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை கால அவகாசம் வழங்கி ஜூன் இறுதி வரை பதவியில் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தான் ஒப்புக்கொண்டதாக ஷார்ப் கூறினார். 2021 ஆம் ஆண்டில் ஒளிபரப்பாளரின் தலைவராக ஷார்ப் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தை நாட்டின் பொது நியமனங்கள் கண்காணிப்புக்குழு ஆராய்ந்து வருகிறது. சாத்தியமான முரண்பாடுகளை வெளிப்படுத்தத் தவறியதன் மூலம், பொது நியமனங்களுக்கான அரசாங்கத்தின் குறியீட்டை அவர் […]

இலங்கை செய்தி

பாணந்துறையில் திடீரென கரைக்கு வந்த பாரிய முதலை

  • April 28, 2023
  • 0 Comments

பாணந்துறை கடற்கரைக்கு இன்று (28) பிற்பகல் ஏறக்குறைய ஏழு அடி நீளம் கொண்ட முதலை வந்துள்ளது. மாலை 5.30 மணியளவில் கடற்கரைக்கு அருகில் உள்ள கல் அருகே முதலை இருப்பதைக் கண்ட மீனவர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். பாணந்துறை உயிர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த போது முதலை கடலுக்குள் சென்றதுடன் கரையில் இருந்து சுமார் 10-20 மீற்றர் தொலைவில் சுற்றித் திரிந்தது. முதலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், […]

error: Content is protected !!