Site icon Tamil News

இலங்கையர்களுக்கு அமைதியான மரணத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்

நாட்டில் உள்ள முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது உயர் இரத்த அழுத்தத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசிய நாடுகளில் நடுத்தர வயதுடையவர்களுக்கே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாகவும், கொவிட் அனர்த்த காலத்திலிருந்து இலங்கையில் நிலவும் பொருளாதார மந்தநிலை போன்ற சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளும் இந்நிலைமை அதிகரிப்பதற்கு காரணமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. .

உயர் இரத்த அழுத்தம் எந்த அறிகுறிகளையும் காட்டாததால், அது ஒரு நபருக்கு அமைதியான மரணத்தை அளிக்கிறது என்று பேராசிரியர் கூறினார்.

இந்த நிலை மோசமடையும் போது மிகவும் அரிதாக கடுமையான தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம் எனவும் உதய ரலபனாவ குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version